FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Showing posts with label madurai aadheenam. Show all posts
Showing posts with label madurai aadheenam. Show all posts

Saturday, March 2, 2013

Nithyananda is banned to enter Madurai adeenam mutt


Interim order passed by the Madurai district court says that Nithyananda is banned from entering the Madurai Adeenam Mutt.
 Madurai Adeenam Arunagirinathar has filed a petition in the Discrit court-I emphasizing the ban on entering the Madurai adeena mutt by Nithyananda. On hearing this petition, Judge Guruvaiya passed an interim order saying that Nithyananda and his subordinates are banned from entering the Madurai adeena mutt and not to involve in any tasks related with the mutt.
 The judge also ordered, Nithyananda and his subordinates that they are not entitled to sell any property which is in charge of the adeenam mutt
http://sathiyam.tv/english/general/nithyananda-is-banned-to-enter-madurai-adeenam-mutt

Nithyananda restrained from entering Madurai Adheenam

Principal Sub-Judge K. Guruviah, on Tuesday, passed interim orders restraining Nithyananda from entering the mutt of Madurai Adheenam and interfering in the functioning of the mutt.

The Sub-Judge passed the order on hearing the petition filed by Adheenam Arunagirinatha Desikar to restrain Nithyananda and his followers from entering the 1500-year-old Saivaite mutt and to direct the sub-registrar of Madurai South to cancel the registration of the trust he formed in collaboration with Nithyananda.

In yet another interim order, the Sub-Judge also instructed the Adheenam not to sell or transfer the properties of the mutt until final orders are pronounced in a case filed by the Department of Hindu Religious and Charitable Endowments (HR and CE) seeking the removal of the incumbent Madurai Adheenam.
The HR and CE’s case has been posted for further hearing on March 22.

http://www.thehindu.com/todays-paper/tp-national/nithyananda-restrained-from-entering-madurai-adheenam/article4457180.ece


 மதுரை ஆதீன மடத்திற்குள் நித்தியானந்தா நுழைய இடைக்காலத் தடை: மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் உத்தரவு

மதுரை, பிப்.28- 
தமிழக இந்து அறிநிலையத்துறை ஆணையர் சார்பில் மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும் வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த முக்கிய மனு நிலுவையில் இருக்கும் வரை, மதுரை ஆதீனம் அறக்கட்டளை செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த அறக்கட்டளை மூலமோ அல்லது தனிப்பட்ட வகையிலோ ஆதீனத்துக்கு சொந்தமான சொத்துக்களை மதுரை ஆதீனமோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நபர்களோ விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்தியானந்தா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து உருவாக்கப்பட்ட மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது.
அதன் பதிவினை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவோ அவரது தரப்பினரோ நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். அத்துடன் மடத்தின் பணிகளில் அவர்கள் குறுக்கீடு செய்யாமல் இருக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. விசாரணை முடிவில் 2 இடைக்காலத் தடை உத்தரவுகளை நேற்று நீதிபதி பிறப்பித்தார். அதன்படி இந்த வழக்கு முடிவுக்கு வரும்வரை மதுரை ஆதீனத்தின் பொறுப்பில் உள்ள சொத்துக்களை அவரோ, அவரால் நியமிக்கப்பட்டவர்களோ வேறு யாருக்கும் விற்பனை செய்வது, குத்தகைக்கு வழங்குவது உள்பட எந்தவித வில்லங்கமும் செய்யக்கூடாது.
அதேபோல நித்தியானந்தாவும், அவரது தரப்பினரும் மதுரை ஆதீனத்திற்குள் நுழைவதற்கும், ஆதீன பணிகளில் ஈடுபடுவதற்கும் இடைக்காலத்தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். இந்து அறநிலையத்துறை மற்றும் ஆதீனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதான மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் (மார்ச்) 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.


http://www.maalaimalar.com/2013/02/28090954/madurai-adheenam-madam-nithiya.html

Friday, February 15, 2013

நித்தியானந்தாவிற்கு கவுரவ பட்டம் அளித்ததற்கு எதிர்ப்பு!


அலகாபாத், பிப். 15 - கும்பமேளாவுக்குப் போன நித்தியானந்தா, அங்கே சாதுக்களிடையே சண்டையை மூட்டி விட்டு வந்திருக்கிறார். கும்பமேளா என்பது ஆன்மீகத் திருவிழாவாக இருந்தாலும் இந்து மதத்தைக் காக்க தற்கொலைப்படையாக செயல்படும் அகாடாக்களில் இடம்பெற்றுள்ள சாதுக்களின் சங்கமமாகவே இருந்து வருகிறது. 
இம்முறை கும்பமேளாவில் சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவும் கலந்து கொண்டார். அவர் சாரட் வண்டியில் போய் புனித நீராடியதன் பின்னணி இப்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது. அகாடாக்களில் முக்கியமானது நிர்வாண சாதுக்களின் அமைப்பான மஹாநிர்வாணி என்பது. இந்த அகாடா சார்பில் நித்தியானந்தாவுக்கு மஹா மண்டலேஸ்வர் என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டத்துடன்தான் சாரட் வண்டியில் வெள்ளி சிம்மாசனத்துடன் போய் புனித நீராடியிருக்கிறார் நித்தியானந்தா. 
ஆனால் மஹா மண்டலேஸ்வர் என்ற பட்டம் கொடுத்ததற்கு பிற அகாடாக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஏனெனில் இந்த மஹா மண்டலேஸ்வர் என்ற பட்டம் பொதுவாக 13 அகாடாக்களுக்குமான தலைவர் பதவிக்குரியது. அப்படிப் பட்ட பட்டத்தை ஒரு சர்ச்சைக்குரிய சாமியாருக்கு கொடுப்பதா என்பதுதான் பிற அகாடாக்களின் கேள்வி. ஆனால் நிர்வாண சாதுக்கள் அமைப்போ, தென்னிந்திய சாதுக்களுக்கும் வட இந்திய சாதுக்களுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தவே மஹா மண்டலேஸ்வர் பட்டம் கொடுக்கப்பட்டதாகவும் இப்பட்டம் கொடுக்கப்பட்டதாலேயே அகாடாக்களின் தலைவராகி விடமாட்டார் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது.

http://www.thinaboomi.com/2013/02/14/19355.html

Saturday, February 2, 2013

Nithyananda files petition against Madurai Adheenam: Contests his removal

இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து என்னை நீக்கியது தவறு - நித்தியானந்தா வழக்கு
Posted by: Shankar Published: Saturday, February 2, 2013, 11:13 [IST]

மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து தன்னை நீக்கியது தவறு என்றும், மதுரை ஆதீன மடத்தில் பூஜைகள் நடத்த தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டு மதுரை நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். 

மதுரை ஆதீனத்திற்கு எதிராக மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நித்தியானந்தா புதிதாக 2 வழக்குகளை தாக்கல் செய்தார். அவற்றில் முதல் மனுவில், "நான் மதுரையின் 293-வது இளைய ஆதீன மாவேன். என்னை இளைய ஆதீனமாக நியமித்து பல்வேறு பணிகளை செய்யும்படி கூறிய ஆதீனம் திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல், என்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டதாக அறிவித்துள்ளார். 

மடத்தின் சட்ட விதிகளின்படி இது தவறாகும். எந்த குறைபாடுகளும் இல்லாத நிலையில் என்னிடம் விளக்கம் பெறாமல் என்னை நீக்குவதற்கு மதுரை ஆதீனத்திற்கு உரிமை இல்லை. 

அத்துடன் இளைய ஆதீனமான நான் மடத்திற்குள் பூஜைகளை நடத்த வேண்டும். ஆனால் நானும், எனது தரப்பினரும் மடத்திற்குள் வருவதற்கு மதுரை ஆதீனம் தடையாக உள்ளார். எனவே என்னையும் என் தரப்பினரையும் மதுரை ஆதீனத்திற்குள் சென்று வர அனுமதி அளிக்க வேண்டும்,"' என்று கூறப்பட்டுள்ளது. 

அதேபோல மற்றொரு மனுவில், ‘‘இளைய ஆதீனமான என்னிடம் கலந்து பேசாமல் திடீரென்று தம்புரான் ஒருவரை மதுரை ஆதீனம் நியமனம் செய்துள்ளார். இதுபோல தம்புரான் நியமிக்கும் வழக்கம் மதுரை ஆதீனத்தின் விதிகளில் இல்லை. எனவே விதிகளுக்கு மாறாக உள்ள அந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்.'' என்று கூறப்பட்டுள்ளது. 

இநத மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. அப்போது ஆதீனம் தரப்பு வக்கீல்கள் வி.நாகேந்திரன், ஜெ.ராமமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்குகளுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

இதையடுத்து நித்தியானந்தா தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


English summary: Nithyananda filed petition against the removal of him and his supporters from Madurai Aatheenam.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/02/tamilnadu-nithyananda-files-petition-against-madurai-aatheenam-169030.html

Friday, February 1, 2013

Nithyananda filed 2 petitions against Madurai Adheenam


மதுரை ஆதீனத்திற்கு எதிராக 2 வழக்குகள்

Thursday, January 31, 2013

Petition filed by Nithyananda dismissed


MADURAI, January 30, 2013 
Staff Reporter 

Principal Sub-judge K. Guruviah, on Monday, dismissed a petition filed by Nithyananda, seeking to thwart a bid by Madurai Aadheenam Arunagirinathar to dissolve a trust formed in association with the former.

According to Nithyananda, the Aadheenam did not consult him before attempting to dissolve the trust registered in both their names. Therefore, the court should pass orders forbidding the Aadheenam from dissolving the trust, he pleaded. 

However, the Aadheenam claimed that the trust was formed under the Madurai Mutt and hence there was no necessity to get approval from Nithyananda. 

The judge held that Nithyananda’s claims were unwarranted and dismissed the petition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/petition-filed-by-nithyananda-dismissed/article4359370.ece

Petition filed by Nithyananda dismissed


MADURAI, January 30, 2013 
Staff Reporter 

Principal Sub-judge K. Guruviah, on Monday, dismissed a petition filed by Nithyananda, seeking to thwart a bid by Madurai Aadheenam Arunagirinathar to dissolve a trust formed in association with the former.

According to Nithyananda, the Aadheenam did not consult him before attempting to dissolve the trust registered in both their names. Therefore, the court should pass orders forbidding the Aadheenam from dissolving the trust, he pleaded. 

However, the Aadheenam claimed that the trust was formed under the Madurai Mutt and hence there was no necessity to get approval from Nithyananda. 

The judge held that Nithyananda’s claims were unwarranted and dismissed the petition.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/petition-filed-by-nithyananda-dismissed/article4359370.ece

Tuesday, January 29, 2013

Nithyananda plea against Madurai adheenam rejected

Posted by: Sudha Published: Tuesday, January 29, 2013, 12:01 [IST]

மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மீது நித்தியானந்தா தொடர்ந்த வழக்கை மதுரை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

 தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், மதுரை மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார். அதில், இந்து அறநிலையத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதீனம் தரப்பில் மதுரை ஆதீனம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. ஆதீன மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எனவே மதுரை ஆதீனம் அருணகிரிநாதரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, அடுத்த ஆதீனம் நியமிக்கப்படும்வரை மடத்தின் பொறுப்புகளை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இதையடுத்து அருணகிரிநாதர், அதே கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த பெயரில் பதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், மதுரை ஆதீன மடத்தில் நித்தியானந்தாவும், அவருடைய தரப்பினரும் நுழைய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் நித்தியானந்தா, ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மதுரை ஆதீனம் அறக்கட்டளையை நானும், அருணகிரிநாதரும் சேர்ந்து சட்டப்படி உருவாக்கினோம். அறக்கட்டளையை கலைக்க விரும்பினால் முதன்மை அரசு வக்கீலிடம் முன் அனுமதி பெற வேண்டும். அறக்கட்டளையில் உள்ள எனக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். 

ஆனால், அதுபோன்று எந்தவித அனுமதியும் பெறாமல் அறக்கட்டளை கலைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலைத்தது தவறு. சட்டப்படி அறக்கட்டளையை கலைக்காமல் அறக்கட்டளைக்கான பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று அருணகிரிநாதர் தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்கக்கூடாது. அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இதற்கு அருணகிரிநாதர் தாக்கல் செய்த பதில் மனுவில், சாதாரணமாக உருவாக்கப்படும் அறக்கட்டளைகளுக்குத்தான் நித்தியானந்தா கூறியுள்ள விதிமுறைகள் பொருந்தும். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மதுரை ஆதீனம் போன்ற மடங்களில் அமைக்கப்படும் அறக்கட்டளைகளை கலைக்க அந்த விதிகள் பொருந்தாது. எனவே சட்டப்படியான அடிப்படை காரணங்கள் இல்லாததால் நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனுக்கள் நீதிபதி கே.குருவையா முன்பாக விசாரணைக்கு வந்தன. ஆதீனம் தரப்பில் வக்கீல் நாகேந்திரன், ராமமூர்த்தி ஆகியோர் ஆஜரானார்கள். முடிவில் ஆதீனம் மனுவை தள்ளுபடி செய்யக்கோரிய நித்தியானந்தாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 http://tamil.oneindia.in/news/2013/01/29/tamilnadu-madurai-court-dismisses-nithyanantha-168788.html


DINAMALAR NEWS

மதுரை ஆதீனத்திற்கு எதிரான நித்யானந்தா மனு தள்ளுபடி
 ஜனவரி 29,2013,00:59 IST

மதுரை: மதுரை ஆதீனத்துக்கு எதிராக, நித்யானந்தா தாக்கல் செய்த மனுவை, முதன்மை சப்கோர்ட் நீதிபதி குருவைய்யா, தள்ளுபடி செய்தார். மதுரை ஆதீனத்தை அரசிடம் ஒப்படைக்கவும், நித்யானந்தா-ஆதீனம் இணைந்து துவக்கிய அறக்கட்டளை பதிவை ரத்து செய்ய உத்தரவிடவும், மடத்தின் சொத்துகளை ஆதீனமோ, அவர் தரப்பினரோ வேறு நபருக்கு விற்க, பதிவு செய்ய இடைக்காலத் தடை விதிக்கவும் வலியுறுத்தி, இந்து அறநிலையத்துறை ஆணையர் தனபால், முதன்மை சப்கோர்ட்டில் மனு செய்தார். நித்யானந்தா இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டதை ரத்து செய்யவும், ஆதீன அறக்கட்டளையின் பதிவை ரத்து செய்யவும், ஆதீன மடத்தில் நித்தியானந்தா நுழைய தடை விதிக்கவும் கோரி, ஆதீனம் தரப்பு, அதே கோர்ட்டில் மற்றொரு மனு செய்தது. அறக்கட்டளையை பதிவு செய்த தெற்கு சார்பதிவாளரையும் இணைக்க வலியுறுத்தி, நித்யானந்தா தரப்பு, மனு செய்தது. ஒரே நேரத்தில் தாக்கலான, மூன்று தரப்பினரின் வெவ்வேறு மனுக்கள் மீதான விசாரணை, நடந்து வருகிறது. இதற்கிடையில், ஜன.,8ல், நித்யானந்தா தரப்பு புது மனுவை தாக்கல் செய்தது. 
அதில்,"மதுரை ஆதீனத்திற்கு வழக்கு போடும் உரிமை இல்லை. அவர் மனு செய்தது சட்டப்படி செல்லாது. அரசின் முன் அனுமதி பெறாமல் அறக்கட்டளையை களைத்தது, விதிகளுக்கு முரணானது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறியிருந்தனர். இதுதொடர்பாக, நேற்று நடந்த விசாரணையில், நித்யானந்தா தரப்பின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி குருவைய்யா, பிற மனுக்கள் மீதான விசாரணையை, பிப்., 1 க்கு தள்ளிவைத்தார்


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636025