FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Wednesday, December 29, 2010

திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

பல சர்ச்சைகளில் சிக்கிய பிறகு நித்யானந்தா முதன் முறையாக இன்று தனது பிறந்த ஊரான திருவண்ணாமலைக்கு வந்தார்.

2010 மார்ச் மாதம் நடிகை ரஞ்சிதாவுடன் இருந்த சிடி வெளியாகி நித்தியானந்தாவுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வந்தன. பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு அனுபவித்ததும் வெளியானது.

நித்தியானந்தா மீது அவரது முன்னால் சீடர் லெனின் கருப்பன், சல்லாபத்தில் இருந்த நித்தியானந்தாவை நான் தான் ரகசியமாக வீடியோ எடுத்தேன் என பரபரப்பு கிளப்பினர்.

இவர் தந்த புகாரை வைத்து பெங்களுர் போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து 1 மாதம் சிறையில் வைத்திருந்தனர்.

தற்போது ஜாமினில் வெளியே வந்திருக்கும் நித்தியானந்தா அந்த விவகாரத்திற்கு பின் வெளியூர்களுக்கு செல்வதில்லை.

ஆஸ்ரமத்தில் இருந்த படி சத்சங்கம் நடத்தி வந்தார். டிசம்பர் 29ந்தேதி நித்தியானந்தாவின் ஜென்மா நட்சத்திரம். அந்த தேதியில் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்து விடுவார்.

அதன்படி இந்த ஆண்டும் திருவண்ணாமலை வருவதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டது. கர்நாடகா நீதிமன்றம் தந்த உத்தரவையடுத்து இன்று திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசித்தார். விடியற்காலை 5 மணியளவில் கோவிலுக்குள் வந்த நித்தியானந்தா 7.50க்கு புஜைகளை முடித்துக்கொண்டு வெளியே சென்றார்.

நித்தியானந்தாவின் வருகைக்கு சி.பி.எம், ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய மாதர் சங்கம், தமுஎகச அமைப்பு போன்றவை எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்டின. இதனால் பயந்து போய் ராஜகோபுரம் வழியாக கோயிலுக்குள் வந்தவர், பின் கோபுரம் வழியாக வெளியே சென்றார்.
கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அவரின் ஆஸ்ரமத்திற்கு முக்கிய சிஸ்யர்களோடு காரில் புறப்பட்டார்.
செங்கம் சாலை வழியாக சென்றவரை அங்கு மறைந்திருந்த சி.பிஎம்., ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகசவினர் சண்முக பள்ளியருகே கறுப்பு கொடியோடு காத்திருந்தனர். அவர்களை கண்டதும் பயந்து போன நித்தியானந்தாவின் கார், அவரின் கார் பின்னால் வந்த சிஸ்யர்களின் கார்கள் சடன் பிரேக் போட்டு நின்றன.
பின்னால் ரிவர்ஸ் எடுத்து திரும்பவும் நகருக்குள் காரை செலுத்தி அவலூர் பேட்டை சாலை க்கு போக்கு காட்டி பின் வேலூர் சாலைக்கு சென்று காஞ்சி சாலை வழியாக அவரின் ஆஸ்ரமத்திற்குள் போய் சேர்ந்தார் நித்தியானந்தா.
பயந்து பின்வாங்கி போன காரை கண்டு அவரது சிஸ்யர்கள், பக்தர்களே அதிர்ந்து போயினர்.

பாலியல் புகாருக்கு உள்ளான நித்யானந்தா கோயிலுக்குள் வந்ததால் புனிதம் கெட்டுவிட்டது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

-------------------------------------------------------------------------------------------------------------
நித்தியானந்தாவின் ஜென்ம நட்சத்திர புஜை இன்று காலை 5.30 மணியளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னதியில் நடைபெற்றது, அதன் பின் உண்ணாமலையம்மன் சந்நதி, நவகிரக சன்னதியில் நெய் விளக்கு என தொடர்ந்து வணங்கி வந்தவர். கோவில் பிரகாரத்தில் உள்ள அருணகிரி நாதர் சந்நதி முன் அமர்ந்துவிட்டார்.


20 நிமிடங்களுக்கு மேல் அவரின் தலைமை நிலைய சீடர்கள் நடத்திய சிறப்பு புஜையில் அமர்ந்து தியானம் செய்தவர் கடைசி நிமிடத்தில் கண் கலங்கி அழுதவர் அவரின் பின்னால் அமர்ந்திருந்த 1000த்திற்கும் அதிகமான சீடர்களுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்துக்கொண்டார்.


அதன் பின் கோவிலின் ஒரு பகுதியில் அமர்ந்து அவரின் சிஷ்யர்களுக்கு விபுதி தந்து ஆசிர்வாதம் செய்தார். நீண்ட நேரம் கோவிலில் இருந்ததால் கடுப்பான காவல்துறை அவரை அங்கிருந்து வெளியே அனுப்பியது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=46018

No comments:

Post a Comment