FLASH NEWS!!


Latest Updates and Breaking News



DHARMANANDA (Lenin Karuppan) GRANTED BAIL in the case filed by actress Ranjitha in Ramnagar, Karnataka


ONE MORE VICTIM COMPLAINS AGAINST CULT NITHY!!!!

CID files SECOND Charge Sheet


Renowned Forensic Expert Padma Bhushan Prof. Dr. P. Chandra Sekharan states: "scandal video not morphed and not edited; the video Nithyananda gave for US testing maybe edited!"




10 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


3 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned



Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)


--------------------------------------------------------------------------------

Woman (victim) complains against cult Nithy!!!!!!!


Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Ms. A. Pushpa alias Ma Nithya Supriyananda's (false) complaint against Dharmananda (Lenin) - closed after police investigations confirmed the complaint is false

High Court quashes summons issued to Dharmananda (Lenin) in Anjula Jackson's case


CID accepts complaints about Nithyananda by phone or fax!
Victims can call (080-22381894 or 080-22942602 or fax (080-22094426) their complaints


Satyameva Jayate


Friday, May 11, 2012

Nadandadhu Enna - Nithyananda in Madurai Adheenam

Vijay TV analysis of Nithyananda's appointment


Nityanandha has been named the next Madurai Aathinam & the decision taken by the Aathinam has sprung surprises and discontent among all levels. Madurai Aathinam explains and justifies his decision to select Nithyanandha as his heir. Nityanandha is given a grand welcome in Madurai. He wants the mutt to claim ownership of Madurai Meenakshi temple.


Opposition to Nithyananda's Appointment Growing


நித்யானந்தா நியமனம் எதிர்ப்பு வலுக்கிறது

பதிவு செய்த நாள் : 
மே 11,2012,00:46 IST

மதுரை: மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்ததற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மதுரையில், சங்கத்தின் மாநில கவுரவ தலைவர் அருணன் கூறுகையில், "மதுரை ஆதீனத்தின் வாரிசாக ஒருவரை நியமிக்க, அதற்கென உரிமை, கட்டுப்பாடு, பயிற்சிகள் பல உள்ளன. இவை எதுவும் இல்லாமல், பாலியல் வழக்கில் தொடர்புடைய நித்யானந்தாவை வாரிசாக நியமித்தது சரியில்லை.
ஆதீனத்தின் சொத்துக்கள் அனைத்தும், மக்கள் கொடுத்தவை. இந்த சொத்துக்கள் நித்யானந்தாவிடம் சென்றால், அது பாதுகாப்பாக இருக்காது. நித்யானந்தா மீதான வழக்கு தீரும் வரை, அவரை நியமிக்கக் கூடாது. எனவே, அவரது நியமனத்தை, மதுரை ஆதீனம் வாபஸ் பெறவேண்டும் என்றார். இந்நிலையில், மதுரை ஆதீன மீட்புக் குழு சார்பில், மே 13ல், மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள, தருமபுர ஆதீன சொக்கநாதர் திருமண மண்டபத்தில், "மதுரை ஆதீன மீட்பு ஆலோசனை மாநாடு' நடைபெறுகிறது. இதில், இந்து சமய இயக்கங்கள், சிவனடியார்கள், துறவிகள், மடாதிபதிகள் பங்கேற்கின்றனர். 

Source : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=465005

Monday, May 7, 2012

VHP Protests Against Nithyananda's Appointment

Vishwa Hindu Parishad (VHP) protests against tainted Swami Nithyananda's appointment as Madurai Aadhenam's head. 


Click the link below to watch the news telecast
http://www.istream.com/news/watch/92630/VHP-to-protest-against-Swami-Nithyananda

Sunday, May 6, 2012

Documents seized from Madurai Aadheenam


MADURAI: After income tax officials raided the premises of Madurai Aadheenam on Saturday,� sources said that some documents have been seized for investigation. It was not known immediately whether any unaccounted cash was seized. Arunagirinatha Desigar was present during the search, officials of the mutt said. The mutt staff cooperated with the search team, they claimed. Officials of the mutt alleged that the raid was conducted to thwart the scheduled visit of Arunagirinatha Desigar to Tiruvannamalai to participate in the Pattabishekam of Nithyananda scheduled for Saturday evening.
They also alleged that the search was conducted at the behest of a Union minister. They said they expected such raids in Madurai Aadheenam after Nithyananda was anointed as the junior pontiff.
They recalled that such raids were conducted in the Nithyananda Dhyanapeetam in Bidadi, Karnataka. Arunagirinathar, the 292rd pontiff, left for Tiruvannamalai in the afternoon, after the search, to participate in the Pattabishekam.
The Madurai Mutt which has a history of 2,000 years was revived to glory by Tirugnana Sambandar, one of the four Saivite savants. There are several temples under its control including the famous Kanjanur temple in Thanjavur district.

http://ibnlive.in.com/news/documents-seized-from-madurai-aadheenam/255168-60-118.html

செக்ஸ் நி‌த்யான‌ந்தா மடாதிபதியானதன் ‌‌பி‌ன்ன‌ணி!


பிரபல‌ம் இ‌ல்லாதவ‌ர்க‌‌ள் ஒருவ‌ர் ‌பிரபல‌ம் அடைய வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், ஒ‌ன்று ர‌சிக‌ர்க‌ள் பல‌‌ம் வே‌ண்டு‌ம், இ‌ல்லையெ‌ன்றா‌ல் ஏதாவது ஒரு துறை‌யி‌ல் சா‌தி‌த்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் சா‌மியா‌ர் ‌நி‌‌த்யான‌ந்தா புக‌ழ் பர‌வியது, செ‌க்‌‌ஸ் மூல‌ம். இ‌ப்படி புக‌ழ் பெ‌ற்ற ஒருவ‌ர் த‌ற்போது, மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பு ஏற்று‌ள்ளா‌ர். இத‌ற்கு காரணக‌ர்‌த்தாவாக இரு‌ந்து‌ள்ளா‌ர் மதுரை ஆ‌தின‌‌ம்.
‌பிரபல த‌மி‌ழ் நடிகையான ர‌‌ஞ்‌சிதாவுட‌ன் ச‌ா‌மியா‌ர் ‌நி‌‌த்யான‌ந்தா நெரு‌க்கமாக இரு‌ந்த ‌‌வீடியோ கா‌ட்‌சியை சன் தொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ளிபர‌ப்‌பி நாடு முழுவது‌ம் பெரு‌ம் பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தியது. அதுவரை ‌நி‌த்யான‌ந்தா யா‌ர் எ‌ன்று தெ‌ரியாதவ‌ர்க‌ள் கூட தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல் இ‌ந்த ‌வீடியோவை பா‌ர்‌த்து
தெ‌ரி‌ந்து கொ‌ண்டன‌ர்.
இ‌ப்படி ம‌க்க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் ‌பிரபலமான ஒரு சா‌‌மியாரை மதுரை ஆ‌‌தீன‌‌ம் மகுட‌ம் சூ‌ட்டி பா‌ர்‌த்து‌ள்ளா‌ர். ‌நி‌த்யான‌ந்தாவு‌க்கு மகுட‌ம் சு‌ட்டி மதுரை ஆ‌‌தீன‌ம் பெ‌ற்ற தொகையோ ஒரு கோடி ரூபா‌ய் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. ஆனா‌ல், ஆ‌‌தீன‌த்‌தி‌ன் ஆ‌ன்‌மீக‌ப் ப‌ணி‌க்காக ஒரு கோடி ரூபா‌ய் கொ‌டு‌த்ததாக ‌நி‌‌த்யான‌ந்தா கூறு‌கிறா‌ர். அதும‌ட்டு‌மி‌ன்‌றி இ‌ன்னு‌ம் 4 கோடி ரூபா‌ய் கொடு‌க்க உ‌ள்ளே‌ன் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர் ‌நி‌த்யான‌ந்தா. அ‌ப்படியெ‌ன்றா‌ல் மதுரை ஆ‌தீன‌த்‌தி‌ன் இளைய மடா‌திப‌தியாக மகுட‌ம் சூ‌ட்ட 5 கோடி ரூபா‌ய் கொடு‌க்க உ‌ள்ளா‌ர்.
மதுரை ஆதீனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த மட‌த்‌தி‌ன் 292வது சன்னிதானமாக ஆ‌‌தீன‌ம் கடந்த 1980ஆம் ஆண்டில் பொறுப்பேற்று‌க் கொ‌ண்டா‌ர். தற்போது 293வது குரு மகா சன்னிதானமாக நித்யானந்தா அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
‌நி‌த்யான‌ந்தாவு‌க்கு மகுட‌ம் சூ‌‌ட்‌டிய மதுரை ஆ‌தீன‌ம், ‌நி‌த்யான‌ந்தாவை ஆஹா… ஓகோ… எ‌ன்று புக‌ழ்‌ந்து த‌ள்‌ளினா‌ர். ”ஆற்றல் மிக்கவர், ஆங்கிலத்தில் பேசும் திறமை மிக்கவர், நோய்களை குணப்படுத்து‌ம் திறமை கொண்டவர். அவரை மதுரை ஆதீன வாரிசாக அறிவிப்பது உலக தமிழ்மக்களுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்து உள்ளது. ஆதீன மடத்தின் பொறுப்பை அவர் ஏற்பது நாங்கள் செய்த புண்ணியம்” எ‌ன்றா‌ர்.
”மதுரை ஆதீனமாக ‌நி‌‌த்யான‌ந்தாவை நியமித்தது குறித்து சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களது அறியாமையை தான் வெளிக்காட்டுகிறது. அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சா‌ற்றுகள் பொய்யானவை. ஆதீனத்தின் வாரிசாக ஒருவரை நியமிப்பது அந்த ஆதீன கர்த்தரின் பொறுப்பு. இதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை” எ‌ன்று மதுரை ஆதீனம் ‌ஆவேச‌த்துட‌ன் கூ‌றினா‌ர்.
மகுட‌ம் சூ‌ட்டி‌க் கொ‌ண்ட ‌நி‌த்யான‌ந்தா, ”ஆதீனத்தின் எல்லா புகழையும் நிலை நாட்டுவேன். என் மீது சிலர் பல்வேறு வதந்திகளை பரப்புகிறார்கள். அவர்கள் எல்லாம் பொய்யானவர்கள்” எ‌ன்றா‌ர்.
”யோ‌க்‌கிய‌ன் வாறா‌ன் செ‌ம்ப எடு‌த்து ஒ‌‌ளி‌ச்சு வை” எ‌ன்ற கதைதா‌ன் ‌நியாப‌கத்து‌க்கு வரு‌கிறது.
கடந்த 8 ஆண்டு காலமாக ‌‌நி‌த்யான‌ந்தாவுட‌ன் பழகி வ‌ந்த மதுரை ஆ‌தீன‌ம், பெங்களூரில் நடந்த ஒரு யாகசாலை பூஜையில் கலந்து கொள்ள சென்ற போது, ‌நி‌த்யான‌ந்தாவை மடத்தின் வாரிசாக அறிவிக்க விருப்பம் தெரிவித்து‌ள்ளா‌ர். அ‌ப்போது, இறைவனிடம் உத்தரவு கேட்டு கூறுகிறேன் என்று சொல்லிய ‌நி‌த்யான‌ந்தா, மறுநாள் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக கூறி‌வி‌ட்டா‌ர்.
மதுரை ஆதீனம் தனது இளைய வாரிசாக 293வது குருமகா சன்னிதானமாக நித்யானந்தாவை நியமித்தார். ப‌‌திலு‌க்கு ஆதீனத்துக்கு தங்கக்கிரீடமும், துளசி மாலையும் அணிவித்து ஆசி பெற்றார் ‌நி‌த்யான‌ந்தா. இதைத்தொடர்ந்து நித்யானந்தாவுக்கு மதுரை ஆதீனம் தங்கக் கிரீடமும், உத்திராட்சை மாலையும் அணிவித்தார்.
மதுரை ஆ‌‌தீன‌த்‌தி‌ன் இ‌ந்த செய‌லை ப‌ல்வேறு இ‌ந்து அமை‌‌ப்புக‌ள் க‌ண்டி‌த்து‌ள்ளன. இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இ‌ந்து அமை‌ப்புக‌ள் போரா‌ட்ட‌த்‌தி‌ல் கு‌தி‌த்து‌ள்ளது.
செ‌க்‌‌ஸ் ‌வீடியோ மூல‌ம் ‌பிரபலமான சா‌மியா‌ர் ‌நி‌த்யான‌ந்தா, மதுரை ஆ‌தீன‌த்தை முழுமையாக கை‌ப்ப‌ற்‌‌று‌ம் நா‌ள் வெகு‌விரை‌யி‌ல் அர‌ங்கேறு‌ம் எ‌ன்பது உறு‌தி. நே‌ற்றுதா‌ன் மூடிசூடி‌க் கொ‌ண்ட ‌‌நி‌த்யான‌ந்தா, ஆ‌‌தீன மட‌த்தை ‌நி‌ர்வா‌கி‌க்க 50 பேரை உடனடியாக அனு‌ப்‌பி வை‌த்து‌‌வி‌ட்டா‌ர்.

http://www.kalapam.ca/2012/05/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E2%80%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E2%80%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE/

Saturday, May 5, 2012

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தா ஆதீனமாக வரக்கூடாது : மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

மாற்றம் செய்த நேரம்:5/5/2012 10:40:29 AM

மதுரை: பாலியல் குற்றச் சாட்டு உள்ள நபரை ஆதீனமாக தேர்வு செய்யக்கூடாது என மார்க் சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார். மதுரையில் நேற்று ஜி.ராமகிருஷ் ணன் அளித்த பேட்டி: மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து வரும் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை எதிர்ப்பு பிரசாரம் நடைபெறுகிறது. மாநில அரசின் உரிமையை மத்திய அரசு பறிக்கக் கூடாது. இதே போன்று மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளை பறிக்கக் கூடாது. உள்ளாட்சி நிதி ஆதாரத்தை பெருக்குவதற்காக நிதி ஆணையக்குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை கடந்த செப்டம்பர் மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இக்குழுவின் அறிக்கையை தமிழக அரசு சட்டமன்றத்தில் வைக்கவில்லை.

புதுக்கோட்டை இடைத்தேர்தல் தொடர்பாக நாளை சென்னையில் கூடும் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். பொதுவாக தமிழகத்தில் உள்ள மடங்களில் ஆதீனத்தின் வாரிசாக சிறுவயதில் ஒருவரை தேர்வு செய்து, அவருக்கு முறையான பயிற்சி கொடுக்க வேண்டும். அதன் பின் அவர் அந்தப் பதவிக்கு வரமுடியும். ஆனால் மதுரை ஆதீனத்தில் முரண்பாடாக உள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவரை ஆதீனமாக நியமித்து இருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும். ஒரு ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு கொடுத்ததைவிட மின் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம், விலைவாசி உயர்வு மூலம் அவர்களிடமிருந்து பறித்ததுதான் அதிகம். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=11610

நித்யானந்தா பொறுப்பு ஏற்ற மதுரை ஆதீன மடத்தில் சோதனை: வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை


மதுரை, மே. 5-
 
திருஞான சம்பந்தரால் 1,400 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆதீனம் மடம் தோற்றுவிக்கப்பட்டது. சைவ சித்தாந்த கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்த ஆதீனம் பாரம்பரிய சிறப்புக் கொண்டது.
 
மதுரை, விருதுநகர், திருச்சி, திருவாரூர், சிவகங்கை உள்பட பல ஊர்களில் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ள மதுரை ஆதீனத்தின் தற்போதைய 292-வது ஆதீனமாக ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம் பந்த தேசிக பரம்மாச்சார்யா உள்ளார். இவர் கடந்த வாரம் மதுரை ஆதீனத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவுக்கு முடி சூட்டினார்.
 
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா நியமனத்துக்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. நித்யானந்தாவுக்கு எதிராக சென்னை, மதுரை கோர்ட்டுக்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. நித்யானந்தா ஆபாச சி.டி. புகாரில் சிக்கியவர் என்பதால், அவரை மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக தொடர விடக்கூடாது என்பதில் மற்ற ஆதீன தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.
 
மதுரை ஆதீனத்தின் பாரம்பரிய பெருமையை காக்க வேண்டுமானால், அந்த ஆதீனத்தை அரசே ஏற்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தின் கோடிக்கணக்கான சொத்துக்களை நித்யானந்தா நிர்வகிக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சொத்துக்கள் தொடர்பாக அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
 
குறிப்பாக மதுரை ஆதீன சொத்துக்கள் மற்றும் வரவு- செலவுகள் பற்றிய குற்றச்சாட்டுக்களும் எழுந்தன. இந்த நிலையில் மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனத்தில் மதுரை மண்டல வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீரென வருமான வரி சோதனை நடத்தினார்கள். மண்டல இணைக்கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது.
 
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது மதுரை ஆதீனம் ஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரம்மாச்சார்யா மட்டுமே இருந்தார். இளைய ஆதீனம் நித்யானந்தா இல்லை. நித்யானந்தா பெங்களூர் சென்றுவிட்டதால், அவரது சீடர்கள் சிலர் மட்டுமே ஆதீன வளாகத்தில் இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள், ஆதீனத்தில் இருந்த யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.
 
அதுபோல வெளியில் இருந்து யாரும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. எல்லா கதவுகளையும் மூடிக்கொண்டு சோதனை நடத்தினார்கள். மதுரை ஆதீனம் 2 மாடி கட்டிடம் மற்றும் வளாகத்தை கொண்டது. அந்த வளாகம் முழுவதும் எங்கு வேண்டுமா னாலும் சோதனை செய்து கொள்ளுங்கள் என்று பெரிய ஆதீனம் அனுமதி கொடுத்தார். இதையடுத்து ஆதீனம் முழுக்க ஒவ்வொரு அறையாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
 
அதிகாரிகள் 2 குழுவாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர். நித்யானந்தா இளைய ஆதீனமாக பொறுப்பு ஏற்றபோது அவருக்கு தங்க கிரீடம் சூட்டப்பட்டது. கையில் தங்க செங்கோல் கொடுக்கப்பட்டது. அதுபோல பெரிய ஆதீனமும் தங்க கிரீடம் மற்றும் கையில் தங்க செங்கோலுடன் காணப்பட்டார். ஸ்ரீஅருணகிரி ஞானசம்பந்தரும், நித்யானந்தாவும் ஏராளமான தங்க ஆபரணங்களும் அணிந்திருந்தனர். அந்த நகைகள் குறித்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ததாக தெரிய வந்துள்ளது.
 
நகைகள் தவிர ஆதீனத்தில் பல கோடி பணம் கையிருப்பு உள்ளது. அந்த பணத்துக்கு முறையாக கணக்கு உள்ளதா? என்றும் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்தனர். இது தவிர ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றுக்கு மதுரை ஆதீனம் சார்பில் முறைப்படி வருமான வரி கட்டப்பட்டுள்ளதா? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? என்று கணக்குகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. 

http://www.maalaimalar.com/2012/05/05110128/madurai-adhinam-income-tax-rai.html