FLASH NEWS!!


Latest Updates and Breaking NEWS

Child Protection Cell To Take Against Nithyananda Gurukul at High Court


15 CASES FILED BY NITHY'S CULT TO HARASS THE WHISTLE BLOWER DHARMA (LENIN)

3 cases filed in the US against Accused 1 Nithyananda (Mr. Rajasekar), Nithyananda Foundation,

Accused 2 Mr. Gopal Reddy Sheelum (Sri Nithya Bhaktananda), Accused 3 Mr. Siva Vallabhaneni (Sri Nithya Sachitananda)
and Ma Nithya Sadananda (Mrs. Jamuna Rani)


4 cases filed in India against Nithyananda Dhyanapeetam for fraud:
Donors of Hyderabad Ashram, Rajapalayam Ashram ,trichy ashram and Seeragapadi Ashram (near Salem) demand that
fraudulently obtained donations be returned

Nithyananda case: High court dismisses plea challenging charge sheet (Click here to watch video)

--------------------------------------------------------------------------------

Nithyananda's sleaze CD is GENUINE: CID (Click here to read entire article)

Thursday, March 4, 2010

நித்தியானந்தாவுடன் ரஞ்சிதாவை இணைத்து மாட்டி விட்டது ஒரு பெண்?

Nithyanantha
Vote this article
Up (1526)
Down (1240)


சென்னை: நடிகை ரஞ்சிதாவை பயன்படுத்தி, நித்தியானந்தாவை செக்ஸ் லீலையில் சிக்க வைத்து அதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்து, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு சிடியை அனுப்பி வைத்தவர் ஒரு பெண் என்று கூறப்படுகிறது.

சாமியாருடன் ஏற்பட்ட மோதலால்தான் இந்த வேலையை அவர் செய்திருப்பதாகவும், காசு பார்க்கும் நோக்கமும் அவருக்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நித்தியானந்தா மீது நடிகை ரஞ்சிதா விழுந்து புரள்வது, முத்தம் கொடுப்பது, காலை அமுக்கி விடுவது, மாத்திரை எடுத்துக் கொடுப்பது, ஐஸ்க்ரீம் கொடுப்பது, தண்ணீர் கொடுப்பது மற்றும் இன்ன பிற வேலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்த காட்சிகளை படமாக்கியவர் யார் என்ற கேள்வி அடுத்து விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நித்யானந்தாவின் மடத்தின் சார்பில் சென்னை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தங்களது ஆசிரமத்தைச் சேர்ந்த பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் இதைச் செய்ததாக கூறியுள்ளனர்.

அதேசமயம், நடிகை ரஞ்சிதா மற்றும் நடிகை ராகசுதா ஆகியோர் மீதும் சந்தேகம் விழுந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில ஆளுநராக இருந்த என்.டி.திவாரியின் செக்ஸ் லீலைகளை ரகசியமாக படம் பிடித்து வெளியிட்டு அவரை பதவியிலிருந்து விரட்டினர்.

அதே பாணியில் வேகமாக வளர்ந்து வந்த நித்யானந்தாவையும் கவிழ்த்த இந்த வீடியோ சதி அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பெண் விஷயத்தில் பலவீனமானவர்களைக் குறி வைத்து இதுபோன்ற செயல்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த வலையில்தான் தற்போது நி்த்யானந்தா சிக்கி விட்டார்.

நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா அலங்கோலமாக இருக்கும் படுக்கை அறை காட்சிகளை ஒரு பெண்தான் அதிநவீன முறையில் படம் பிடித்துள்ளார் என்றும், அவர்தான் டிவி, பத்திரிக்கை அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்தார் என்றும் தகவல்கள் கிளம்பியுள்ளன.

அந்த சி.டி.யுடன் 10 பக்க விளக்கக் குறிப்புகளையும் அந்த பெண் அனுப்பியுள்ளார். அதில் அவர், சுவாமி நித்யானந்தா பல பெண்களுடன் இருக்கும் சி.டி.க்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாராம். ஆனால் தான் யார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

நடிகை ரஞ்சிதா விவாகரத்து பெற்றவர். சாமியாருடன் நீண்ட காலமாகவே ரஞ்சிதா தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சாமியாருடன் சேர்ந்த பிறகு அவர் யோகாசனம் கற்றுக் கொண்டு யோகாசன பயிற்சி குறித்த வீடியோ படம் ஒன்றையும் தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய சர்ச்சைப் படத்தில் சாமியாரை விடவும் ரஞ்சிதாதான் படு வேகமாக செயல்படுகிறார். அவராக வந்து சாமியார் மீது விழுந்து புரளுகிறார். அசிங்கமான செயல்களைச் செய்கிறார், முத்தம் கொடுக்கிறார்.

இதுவும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பும் வகையில் உள்ளது. யாருடைய தூண்டுதலின் பேரிலோ, இதுபோல ரஞ்சிதா நடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதேபோல, சாமியாருடைய ஆசிரமத்திலேயே தங்கி யோகாசன வகுப்புகளை நடத்தி வரும் முன்னாள் நடிகை ராகசுதா மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

சாமியாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ராகசுதா இந்த சி.டி.யை தயாரித்து ஒரு பெண் மூலம் பத்திரிகை மற்றும் டிவிக்கு அனுப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த வீடியோப் படத்தின் பின்னணியில் இருப்பது யார், ரஞ்சிதா, ராகசுதாவின் பங்கு இதில் என்ன, எந்த நோக்கத்திற்காக இது படமாக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை தோண்டி எடுத்து வெளியிட்டால்தான் இதன் முழு விவரமும் தெரிய வரும்.

வீடியோவை தடை செய்ய கோர்ட் மறுப்பு

இதற்கிடையே, நேற்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோக்களையும், படங்களையும் பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரப்பட்டது.

அந்த மனுவில், எனக்கு 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் உள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உள்ளிட்டவற்றை அளித்து வருகிறேன்.

இந்த நிலையில், எனது மடத்தில் புகுந்து விட்ட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் எனது புகழைக் கெடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகையுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை சன் டிவி திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறது.

அதில் இருப்பது நான் அல்ல. எனவே இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, நக்கீரன் ஆகியோர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி மாணிக்கவாசகர், தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நித்தியானந்தாவின் ஆசிரமம் விளக்கம்...

இதற்கிடையே, நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம்.

இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம்.

சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை.
Read: In English
இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.


html

No comments:

Post a Comment